ஆப்நகரம்

தாயாரின் காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்: பெரியகுளம் விரையும் அரசியல் பிரமுகர்கள்!

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது மூப்பின் காரணமாக காலமானார். பொதுமக்களும் அரசியல் கட்சி நிர்வாகிகளும் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 25 Feb 2023, 8:30 am
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள் காலமானார். அவருக்கு வயது 95.
Samayam Tamil ops mother death


கடந்த மாதம் உடல் நலக் குறைவு காரணமாக அவர் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.

இந்நிலையில் மீண்டும் கடந்த 22.02.2023 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் அவரை மருத்துவமனைக்கு சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்து சென்னை புறப்பட்டுச் சென்றார்.
‘அய்யா பேச்சிமுத்து நான் போறேன்யா’ - ஓபிஎஸ் தாயார் மறைவு.!
இந்நிலையில் நேற்று இரவு 9:30 மணி அளவில் அவர் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் செயற்கை சுவாசக் கருவிகளை பொருத்தி அவரை பெரியகுளத்தில் தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நேற்று இரவு 10.02 மணி அளவில் மரணம் அடைந்தார்.

தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த தகவல் அறிந்ததை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்து திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக பெரியகுளம் வந்த ஒபன்னீர்செல்வம் அவரது தாயாரின் உடலை பார்த்த பின் தன் தாயின் காலை பிடித்து கதறி அழுதார்.

இதனைத் தொடர்ந்து அவரது தாயின் உடலுக்கு இறுதி சம்பிரதாயங்களை செய்த பின்பு தாயின் உடலுக்கு மாலை அணிவித்த பின்பு கட்சி நிர்வாகிகள் காலமான ஓபிஎஸ் தாயாரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் இறந்த ஓ. பழனியம்மாள் பெரியகுளம் ஓடக்காரதேவரின் மனைவி ஆவார். இவர்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் 9 பிள்ளைகள். சுசந்திரன், ராஜா, பாலமுருகன், சண்முகசுந்தரம் மற்றும் சகோதரிகள் அமுதா, பேச்சியம்மாள், சாமுண்டீஸ்வரி, ஜெயசித்ரா உள்ளிட்ட ஒன்பது பேர் ஆவர். இதில் பாலமுருகன் என்ற மகன் மற்றும் ஒரு மகள் இறந்த நிலையில் மீதம் 7 பேர் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - பணம், பரிசு மழை: வாக்காளர்கள் கொண்டாட்டம்!
ஓபிஎஸ்ஸின் தாயாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெறும். பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான பொது மயானதில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இன்று காலை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி