ஆப்நகரம்

ஓபிஎஸ் வேட்பாளர் அறிவிப்பு; முடங்குமா இரட்டை இலை..?

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமது தரப்பில் வேட்பாளரை அறிவித்தார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

Samayam Tamil 1 Feb 2023, 5:17 pm
ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அவர் சந்தித்த நிகழ்வும் நடைபெற்றது. ஆனால், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக தெரியவில்லை.
Samayam Tamil ops


இந்த நிலையில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்றைக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதியில் தமது தரப்பில் செந்தில்முருகன் என்பவரை நிறுத்துவதாக அறிவித்தார்.

மேலும், ஒருவேளை பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்றும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். அத்துடன், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி தற்போது வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான்தான் இருக்கிறேன் என்று ஓபிஎஸ் சுட்டிக்காட்டினார். இதனால், அதிமுகவில் மீண்டும் சின்னம் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.

அடுத்த செய்தி