ஆப்நகரம்

காலையில் பேசனது வேறவாயி; இரவில பேசனது நாறவாயி: அமைச்சரை கலாய்த்த ஓ.பி.எஸ்

தமிழகத்தில் கையாளாகாத அரசு தான் நடைபெற்று வருவதாக ஓ.பி.எஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 22 May 2017, 8:23 pm
சென்னை: தமிழகத்தில் கையாளாகாத அரசு தான் நடைபெற்று வருவதாக ஓ.பி.எஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil o panneerselvam attacks tamilnadu govt which is useless one
காலையில் பேசனது வேறவாயி; இரவில பேசனது நாறவாயி: அமைச்சரை கலாய்த்த ஓ.பி.எஸ்


விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அப்போது தனக்கு பின் பொதுச் செயலாளர் இவர் தான் என்று யாரையும் ஜெயலலிதா குறிப்பிடவில்லை என்று கூறினார். முதலீட்டாளர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை இருப்பதாக குற்றம்சாட்டினார். ஜெயலலிதா இருந்திருந்தால் தொழில் முதலீடுகள் வெளியே சென்றிருக்காது என்று கூறினார். காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட பிரச்னையில் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி மீது குற்றம்சாட்டினார்.

உள்ளாட்சி தேர்தல் மிகப்பெரிய பாடமாக அமையும் என்று தெரிவித்தார். கையாளாகாத அரசுதான் தமிழகத்தில் இருக்கிறது என மக்கள் தீர்மானித்துவிட்டதாக குறிப்பிட்டார். தமிழக மக்களின் எந்த ஒரு பிரச்னைக்கு அரசு செவிசாய்ப்பதில்லை என்று கூறினார். தமிழக அமைச்சர்கள் அனைவரும் காலையில் ஒரு பேச்சாகவும், இரவில் வேறொரு பேச்சாகவும் பேசுவதாக விமர்சித்தார்.

O Panneerselvam attacks Tamilnadu Govt which is useless one.

அடுத்த செய்தி