ஆப்நகரம்

அண்ணே நீங்க செய்யுறது சரி இல்லை: ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் பதில் கடிதம்!

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

Samayam Tamil 30 Jun 2022, 2:52 pm
ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறி வரும் நிலையில் ஓபிஎஸ் தரப்போ இரட்டை தலைமை தொடர்வதாக கூறிவருகிறார்.
Samayam Tamil ops eps conflict


உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஏதுவாக ஏ, பி படிவங்களில் கையெழுத்திட அனுப்புமாறு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தற்போது இபிஎஸ் பதில் கடிதம் ஒன்றை அதிமுக பொருளாளர் என்ற பெயரில் அனுப்பியுள்ளார். அதில், “அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு. மகாலிங்கம் அவர்கள் வழியாகப் பெறப்பட்டது. கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது.
ஓபிஎஸ் வைத்த செக்: எந்த முடிவெடுத்தாலும் வெற்றி இவருக்கு தான்!
எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல. மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர்.
Va.pugazhendi அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை: முதல்வரை நாடிய புகழேந்தி

தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்படையதாக இல்லை. அதே போல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி