ஆப்நகரம்

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு புதிய பதவி: ஓபிஎஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 27 Sep 2022, 11:15 am
அதிமுகவில் உட்கட்சி மோதல் பெரியளவில் வெடித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் இரு அணிகள் உருவாகின.
Samayam Tamil ops panruti ramachandran


இரு தரப்பும் எதிர்தரப்பில் உள்ளவர்களை கட்சியிலிருந்து நீக்கி வந்த நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளதால் இந்த பிரச்சினை தொடர்ந்து வருகிறது.

இடைக்கால பொதுச்செயலாளர் நான் தான் என எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் நான் தான் ஓ.பன்னீர் செல்வமும் செயல்பட்டு வருகின்றனர். சசிகலாவோ நான் தான் பொதுச்செயலாளர் என கூறிவருகிறார்.
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ பேச்சு!
அதிமுகவில் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் மூத்த அரசியல்வாதி பன்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாகவும் பன்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

இதனால் எடப்பாடி பழனிசாமியும் பண்ருட்டி ராமச்சந்திரனை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் வெடிகுண்டு கலாச்சாரம் தான்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
இந்த சூழலில் பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அமைப்புச் செயலாளராக நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கழகத் தொண்டர்கள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி