ஆப்நகரம்

இரட்டை இலை சின்னம் : எடப்பாடிக்கு செக் வைத்த ஓபிஎஸ் - டெல்லிக்கு போன விவகாரம்!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக புதிய மனு ஒன்றை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ளார்.

Authored byஎழிலரசன்.டி | Samayam Tamil 26 Mar 2024, 6:27 pm
அதிமுகவில் இருந்து ஓரங்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக் குழுவில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியின் கைகளில் கட்சி முழுவதுமாக வர, தற்போது அதிமுக பொதுச் செயலாளராக இருந்து வழிநடத்தி வருகிறார். ஆனாலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே செயல்பட்டு வந்தார் ஓபிஎஸ்.
Samayam Tamil OPS EPS


இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக பெயர், கட்சிக் கொடி, லெட்டர் பேடு, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, அண்மையில் அது சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியால் நிரந்தரமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

திமுகவை பார்த்து தேர்தல் அறிக்கைய காப்பி அடிக்கல.. கோர்ட்டுக்கு போகலாம் - வெடித்து பேசிய ஆர்.பி.உதயகுமார்

அதே சமயம் அதிமுக பெயரை பயன்படுத்த முடியாததால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் நேரடியாக சுயேச்சை சின்னத்தில் களமிறங்கியுள்ளார். இதனிடையே இரட்டை இலை தொடர்பாகவும் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக புதிய மனு ஒன்றை ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் இன்று அளித்தார். அதில், “எடப்பாடி பழனிசாமி அணி கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படுகிறது. ஆகவே, அந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது. அவர் தரப்பு வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

இரட்டை இலை சின்னத்தை எங்களுக்குதான் ஒதுக்க வேண்டும். இல்லையெனில் அதனை எந்த அணிக்கும் தராமல் முடக்க வேண்டும். அவ்வாறு சின்னத்தை முடக்கம் செய்யும் பட்சத்தில் எனக்கு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட பக்கெட் (வாளி) சின்னத்தை ஒதுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

பொன்முடி அமைச்சர் பதவியில் நீடிப்பாரா? - வெயிட்டிங் லிஸ்ட்டில் இன்னொரு ‘கண்டம்’ -நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு விரைவில் விசாரணை!

முன்னதாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் சிலரும் வேட்புமனு மனுதாக்கல் செய்துள்ளது ஓபிஎஸ் தரப்பை கலக்கமடையச் செய்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
எழிலரசன்.டி
நான் எழிலரசன். கடந்த 8 ஆண்டுகளாக டிஜிட்டல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சமூகம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளேன். தற்போது சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer - ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி