ஆப்நகரம்

EXCLUSIVE: வெல்லமண்டி நடராஜன்: இப்படி எல்லாம் பேசக்கூடாதுங்க!

ஓபிஎஸ் ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜன் சமயம் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

Samayam Tamil 20 Jun 2022, 6:06 pm
வெல்லமண்டி நடராஜன் தனது நிலைப்பாட்டை சமயம் தமிழுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Samayam Tamil vellamandi natarajan


அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கிளம்பியதிலிருந்தே ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர். பொதுக்குழுவை தள்ளிவைப்பதற்கான முயற்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈடுபட, திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெற்றே தீரும் என இபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பொதுக்குழுவை தள்ளிவைக்க ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடையே தெரிவித்தார். மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான கே.பி.முனுசாமி கே.பி.முனுசாமி, அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி வருகிற 23ஆம் தேதி எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் உறுதியாக நடைபெறும் என்று கூறினார்.

எடப்பாடி வைத்த ரிக்வெஸ்ட்: மீண்டும் நடைபெறும் கூவத்தூர் சம்பவம்?

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான வெல்லமண்டி நடராஜனை சமயம் தமிழ் சார்பாக தொடர்பு கொண்டோம்.

அப்போது பேசிய அவர், “அதிமுகவில் இரட்டை தலைமையே தொடரும். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 15 மாவட்டச் செயலாளர்கள் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர். 15 மாவட்டச் செயலாளர்கள் தொலைபேசியில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என்று சொன்னாலும் அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
அரசுப் பணி நியமனம்: உயர் நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
இந்த சூழலில் சில மூத்த நிர்வாகிகள் ஒருமையில் பேசுவதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். நாளை அனைவரும் இணைந்து செயல்படவேண்டிய சூழல் வரும் போது தர்மசங்கடத்தை அது உண்டாக்கும்” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி