ஆப்நகரம்

பாத்து செய்யுங்க பிரதமர் ஐயா! பன்னீர்செல்வம் சூசகம்!

மத்திய அரசின் மூன்று ஆண்டு ஆட்சி நிறைவுற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TNN 27 May 2017, 10:45 am
மத்திய அரசின் மூன்று ஆண்டு ஆட்சி நிறைவுற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil o panneerselvam wishes pm narendra modi
பாத்து செய்யுங்க பிரதமர் ஐயா! பன்னீர்செல்வம் சூசகம்!


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி தொடங்கியது. அதிலிருந்து மத்தியில் பாஜக ஆட்சியின் மூன்றாண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், மத்திய அரசின் மூன்றாண்டு ஆட்சியைப் முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டியுள்ளார். “பாரத திருநாட்டை வளர்ச்சி பாதைக்கு இட்டுச்செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பாக, ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை டெல்லி சென்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் மூன்று ஆண்டு ஆட்சிக்கு வாழ்த்தும் கூறியுள்ளது முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதே ஓபிஎஸ்ஸின் நோக்கம் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி