ஆப்நகரம்

ரூ.1 கோடி மதிப்புள்ள மயிர் திருட்டு; மயிரா போச்சுன்னு இனி சொல்ல முடியாது

ஆட்டை திருடி, மாட்டை திருடிய மனிதன், கடைசியில் மயிரையும் (முடி) திருடிய வினோத சம்பவம் விருதுநகர் மாவட்ட கோயிலில் நிகழ்ந்துள்ளது.

TNN 8 Jul 2016, 3:32 pm
விருதுநகர்: ஆட்டை திருடி, மாட்டை திருடிய மனிதன், கடைசியில் மயிரையும் (முடி) திருடிய வினோத சம்பவம் விருதுநகர் மாவட்ட கோயிலில் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil offering hair to god theft in irukankudi mariyamman temple
ரூ.1 கோடி மதிப்புள்ள மயிர் திருட்டு; மயிரா போச்சுன்னு இனி சொல்ல முடியாது


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் பக்தர்கள் திரளாக திரண்டு தங்களது முடியை காணிக்கை கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை கொடுத்த முடி மூடைகளை திருடி, கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.

திருடு போன முடி மூடைகளின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி