ஆப்நகரம்

Oil spill: வாளியில் அள்ளப்பட்டது மறப்பதற்கு முன் மீண்டும் எண்ணூரில் கச்சா எண்ணெய் கொட்டியதால் பரபரப்பு

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் எண்ணெய் குழாய் உடைந்து 2 டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியுள்ளது.

Samayam Tamil 18 Nov 2018, 10:31 pm
சென்னை : எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் எண்ணெய் குழாய் உடைந்து 2 டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியுள்ளது.
Samayam Tamil Ennore Fuel Oil1


சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த 2017 ஜனவரி 28ம் தேதி டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும், பி.,டபிள்யு மேபிள் என்ற கப்பலும் மோதி விபத்துக்குள்ளானதால், டான் காஞ்சிபுரம் என்ற கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியதால் பெரும் சுற்றுச் சூழல் சீர்கேடு ஏற்பட்டது.

வளரும் நாடு இந்தியா என கூறிக் கொள்ளும் நாம், அப்போது வாளியில் எண்ணெய்யை அள்ளியது மறந்திருக்க முடியாது. இதற்கு கப்பல்களின் மாலுமிகளின் தவறு தான் இந்த விபத்துக்கு முழு காரணம் என அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த விபத்தின் தாக்கம் இன்றும் கூட எண்ணூர், திருவெற்றியூர் மற்றூம் காசிமேடு கடற்பகுதிகளில் தெரிகிறது.


மீண்டும் கடலில் எண்ணெய் :
இந்நிலையில் இன்று காலை 4 மணி அளவில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கோரல் ஸ்டோர்ஸ் என்ற கப்பலிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பணி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கச்சா எண்ணெய் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடலோர காவல்ப்படையினர் உடனே எண்ணெய் வெளியேற்றுவதை நிறுத்தினர்.


கடலில் எண்ணெய் கலப்பதற்கு குழாயில் ஏற்பட்ட உடைப்பு தான் காரணம் என தகவல் தெரிவித்துள்ளார். இதனால் 2 டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. இருந்தாலும் இது மிக குறைந்த அளவு தான் என கடலோர காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி