ஆப்நகரம்

சென்னையில் கட்டுகட்டாக பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், சென்னையில் கட்டுக்கட்டாக பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

TNN 18 May 2017, 8:51 am
சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், சென்னையில் கட்டுக்கட்டாக பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil old currencies recovered in chennai
சென்னையில் கட்டுகட்டாக பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்


கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. அதேபோல், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை செல்லத்தக்க புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கான வழிகள் சிலவற்றையும் மத்திய அரசு அறிவித்தது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, வங்கிகளில் பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதேபோல், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், அதன்பின்னர், ரிசர்வ் வங்கி கிளைகளில் 2017-ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை உரிய காரணங்களை கூறி பழைய ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின்னர், பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால், அபராதம், சிறைத்தண்டனை விதிப்பு எனவும் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், கட்டுக்கட்டாக பழைய ரூபாய் நோட்டுகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த தற்போதைய சூழலில், சென்னை கோடம்பாக்க்கம் மேம்பாலம் அருகே உள்ள துணிக்கடை ஒன்றில், சுமார் ரூ.45 கோடி அளவிலான பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டபோது, பழைய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Old currencies recovered in Chennai

அடுத்த செய்தி