ஆப்நகரம்

முதியவரை தாக்கி வழிப்பறி : வேடிக்கை பார்த்தபடி சாலையை கடந்த பொதுமக்கள்

நள்ளிரவு நேரம் சாவையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவரை தாக்கி, அவரிடம் கொள்ளை கும்பல் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் ஆரணியில் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 17 Sep 2019, 11:52 pm
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சத்தியமூர்த்தி சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நேற்றிரவு 9 மணியளவில் முதியவர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்கள் அந்த முதியோரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil oma.


இதனை தடுத்த முதியவரை அந்த வாலிபர்கள் தாக்கியுள்ளனர். ஒருகட்டத்தில் வலிதாங்க முடியாமல் முதியவர் ஓடவே, அவரை பின்தொடர்ந்து சென்ற கொள்ளை கும்பல், அவரிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிய ஓடியது. (வீடியோவை பார்க்க கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்)
https://videoplayer.indiatimes.com/v2/embed.html?apikey=tamilweba5ec97054033e061&videoId=1xntvffo6u&poster=&height=360&width=640

முதியவர் என்றும் பார்க்காமல் அவரை கொள்ளை கும்பல் தாக்கும் காட்சியை, அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள், சற்றும் அலட்டிக் கொள்ளாமல் பார்த்து கொண்டு சென்றதுதான் வேதனையின் உச்சம்.

இந்த கொடுமையான காட்சிகள் அனைத்தும் அந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி, தற்போது வைரலாக பரவி வருகிறது.

இரவு நேரங்களில் சாலைகளில் நடைபெறும் வழிப்பறி, கொள்ளைகளை தடுக்க காவல் துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்பதை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

அடுத்த செய்தி