ஆப்நகரம்

சுருட்டுப் புகைத்த முதியவரை சுட்டுப் புகைத்த சுருட்டு... அணைக்காமல் விட்டதால் உடல் கருகி பரிதாபம்

இராமநாதபுரத்தில், சுருட்டுப் புகைத்துவிட்டு அணைக்க மறந்த முதியவர், குடிசையில் நெருப்புப் பற்றி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Nov 2019, 11:38 am
இராமநாதபுரத்தில், சுருட்டுப் புகைத்துவிட்டு அணைக்க மறந்த முதியவர், குடிசையில் நெருப்புப் பற்றி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ramnad.


இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிராமத்தில் வசித்து வரும் முதியவர் நாகசாமி. சுமார் 80 வயது மதிக்கத்தக்க இவர் தனது குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

இவருக்கு,சுருட்டு புகைக்கும் பழக்கம் உள்ளது. வழக்கமாகவே சுருட்டுப் புகைக்கும் இவர், அதேபோல நேற்று இரவும் சுருட்டுப் புகைத்து உள்ளார். ஆனால், புகைத்து மூடித்ததும், அதை அணைக்காமல் அப்படியே வீசிவிட்டு உறங்கி உள்ளார்.

இந்நிலையில், சுருட்டில் இருந்த தீப்பொறி வீட்டின் ஓலைகளில் தொற்றி நெருப்பானது. தொடர்ந்து குடிசையின் முழ்ப்ப்பரப்புக்கும் பற்றிய தீ கூரையிலும் தொற்றிக்கொண்டது. வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், உள்ளே உறங்கிக் கொண்டிருந்த நாகசாமியும் தற்போது உடல் கருகி உயிரிழந்து விட்டார்.

தக்வலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து, இவரது உடலை மீட்ட ஏர்வாடி காவல் துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி