ஆப்நகரம்

ஆசிரியருக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த முன்னாள் மாணவர்கள்!

நாகைமாவட்டம் , வேதாரண்யத்தில் இயங்கி வரும் அரசு பள்ளி ஆசிரியருக்கு, முன்னாள் மாணவரகள் ரூ.9 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்து கவுரவித்தனர்.

Samayam Tamil 14 May 2018, 5:48 pm
நாகைமாவட்டம் , வேதாரண்யத்தில் இயங்கி வரும் அரசு பள்ளி ஆசிரியருக்கு, முன்னாள் மாணவரகள்ரூ.9 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்து கவுரவித்தனர்.
Samayam Tamil kdbnlnaslfnaln


நாகை மாவட்டம்வேதாரண்யத்தில் உள்ளஆயக்காரன்குளம் கிராமத்தில் இரா. நடேசனார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஆனந்த ராஜ். இவர் கடந்த வாரம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையறிந்த, இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் இவருக்கு சிறப்பான பரிசளித்து, பிரிவுபச்சார விழா நடத்த வேண்டும் என்று விரும்பினர். இதற்காக பணம் வசூலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாட்ஸ் அப் மற்றும் ஆனந்த் ராஜ் மாணவர்கள் அமைப்பு என்ற பெயரில் குழுக்கள் உருவாக்கினர். பழைய மாணவர்கள் அதாவது இவரிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயின்ற மாணவர்கள் மனமுவந்து நன்கொடை வழங்கினர். இந்தத் தொகையில், ரூ. 9 லட்சம் மதிப்பிலான ஸ்விப்ட் டிசையர் கார் வாங்கினர். மேலும், 5 பவுனில் தங்கச் செயின் வாங்கினர்.

பிரிவுபச்சார விழாவின்போது ஆனந்த ராஜ்ஜிடம் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் இவருக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் மற்றும் தங்கச் செயின் பரிசளித்தனர்.

இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், 'ஆசிரியர் ஆனந்த ராஜ் பணி ஓய்வு பெறுகிறார் என்பதை அறிந்ததும், 30 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் அனைவரும் ''ஆசிரியர் ஆனந்த ராஜ் மாணவர்கள் குழு'' மற்றும் ''வாட்ஸ் அப் குழு'' அமைத்தோம்.அந்தக் குழுக்கள் மூலம் பணம் வசூல் செய்தோம். ரூ.9 லட்சம் மதிப்பிலான ஸ்விப்ட் டிசையர் கார் வாங்கி ஆசிரியருக்கு பரிசளித்தோம். அவரிடம் கல்வி பயின்றதால்தான் இந்த சமூகத்தில் நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம். அவர் பல மாவட்ட ஆட்சியர்களை, மருத்துவர்களை, பொறியாளர்களைஉருவாக்கியுள்ளார். இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்ததற்கு நாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். எப்போதும் சிரித்த முகத்துடன் எங்களுக்கு புரியும் வகையில் பாடம் எடுப்பார்'' என்றனர்.
கன்னடத்தில் படிக்க:

அடுத்த செய்தி