ஆப்நகரம்

ஆம்னி பேருந்துகள் ஜுன் 7 முதல் இயங்குகிறதா?

ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த தேதியில் இயக்குவது என முடிவு எடுக்கப்படவில்லை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 May 2020, 11:34 am
கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களுக்குள் போக்குவரத்துக்கு அனுமதி வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்குச் செல்ல அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
Samayam Tamil ஆம்னி பேருந்துகள்


இருப்பினும் அரசுப் பொது போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. மே 31ஆம் தேதிக்குப் பிறகு இதற்கான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படும் என்ற நிலையில் ஆம்னி பேருந்துகள் ஜுன் 7ஆம் தேதி முதல் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

redbus.in உள்ளிட்ட இணையதளங்களில் ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு மட்டுமல்லாமல் அரசு விரைவுப் பேருந்துகளுக்கான முன்பதிவுகளும் தொடங்கியுள்ளன.

கொரோனா: தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் என்ன தெரியுமா?

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்குச் சென்றால் அவர்களை தனிமைப்படுத்தி வைப்பதும், சோதனைகள் மேற்கொள்வதும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் எந்த அடிப்படையில் ஜுன் 7 முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை: கோடை வெயிலைப் போக்க வந்த மழை!

அதேசமயம், “ஆம்னி பேருந்துகளை இயக்குவது சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் எங்களுக்கு வரவில்லை. வந்தவுடன் ஆம்னி பேருந்துகள் இயக்குவது சம்பந்தமாக முடிவு எடுக்கப்படும். தற்பொழுது ஆம்னி பேருந்து எந்த தேதியில் இயக்குவது என முடிவு எடுக்கப்படவில்லை” என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி