ஆப்நகரம்

முதல் ஆளாக சீட் பிடித்த கோவை செல்வராஜ், அருகில் அமர்ந்த ஜெயக்குமார்: கூட்டத்தில் கலகல!

அதிமுக சார்பில் தேர்தல் ஆணைய கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளும் கலந்து கொண்டன.

Samayam Tamil 1 Aug 2022, 12:20 pm
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ஒன்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
Samayam Tamil kovai selvaraj jayakumar


இதேபோல் அனைத்து மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் இந்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன.

சத்யபிரதா சாஹு தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக சார்பில் யார் கலந்து கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. அதிமுக தற்போது ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது.
மன்மோகன் மாதிரி இல்ல மோடி.. அடிச்சா அடிதான்: ஆர்.என்.ரவி பேச்சு!ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுக்குமாறு அதிமுக அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பட்டது. அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் இருப்பதால் அவர் தரப்பிலிருந்து மட்டும் நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர் செல்வமோ தனது ஆதரவாளர் கோவை செல்வராஜ் கலந்துகொள்வார் என்று அறிவித்தார்.

இந்நிலையில் இன்று கூட்ட அரங்கிற்கு முதலாவதாக வந்த கோவை செல்வராஜ் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் ஆகியோர் வந்தனர். கோவை செல்வராஜுக்கு அருகில் ஜெயக்குமாரும் அவருக்கு அடுத்தபடியாக பொள்ளாச்சி ஜெயராமனும் அமர்ந்து கொண்டார்.

மேடையில் இருந்த அதிமுக என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகையை ஜெயக்குமார் தன் பக்கம் நகர்த்தி வைத்துக்கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்: முத்தரசன் தகவல்!
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக ஒரு புறம் கருத்துக்கள் பரிமாறப்பட்டுக்கொண்டிருக்க இந்த சங்கதிகளும் நடந்துகொண்டிருந்தன.

அடுத்த செய்தி