ஆப்நகரம்

மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரி காரில் ஒன்றரை கிலோ கொகைன்!

திண்டுக்கல் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியின் காரில் ஒன்றரை கிலோ கொகைனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Samayam Tamil 12 Jun 2018, 3:22 pm
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியின் காரில் ஒன்றரை கிலோ கொகைனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Samayam Tamil 7


வத்தலக்குண்டுவை சேர்ந்த அருண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ளார்.

இவர் ஒரு வாரமாக லீவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அருணின் காரில் கொகையின் போதைப் பொருள் இருப்பதாக, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து வத்தலக்குண்டு அருகே இவரின் காரை மறித்த அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் ஒன்றரை கிலோ கொகையினை காருக்குள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதை பறிமுதல் செய்த அதிகாரிகள், அருணை அழைத்துச்சென்று விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த
கொகைனை அருண் கொண்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடப்படுவதாக தெரிகிறது.

One and half KG Cocaine seized in car From dindigul APRO Arun

அடுத்த செய்தி