ஆப்நகரம்

போலிச்சான்றிதழ் விற்பனை செய்து மாட்டிக்கொண்ட நபர் கைது!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பல்வேறு அரசு சார்ந்த சான்றிதழை போலியாக தயாரித்து வழங்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 22 Dec 2018, 1:42 pm
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பல்வேறு அரசு சார்ந்த சான்றிதழை போலியாக தயாரித்து வழங்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil போலிச்சான்றிதழ் விற்பனை செய்து மாட்டிக்கொண்ட நபர் கைது!
போலிச்சான்றிதழ் விற்பனை செய்து மாட்டிக்கொண்ட நபர் கைது!


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நியூ டவுன் பகுதியை சேர்ந்த மாணவன் விக்ரம்(14). அங்குள்ள ஒரு பள்ளியில் 6ஆம்வகுப்பு படிக்கும் இவனது ஆதார் அட்டையில் பிறந்த தேதி திருத்தம் செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனையடுத்து மாணவனின் தந்தை விநாயகம், சில நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று அங்குள்ள மைய பணியாளரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர், விண்ணப்பத்தில் அரசு மருத்துவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்றும், வெளியில் உட்கார்த்திருந்த ஒருவரை கை காட்டி அவரிடம் கேட்டு பாருங்கள் வாங்கி கொடுப்பார் என்றும் கூறியதாக தெரிகிறது.

விநாயகம் வெளியில் அமர்ந்திருந்த நபரை அணுகிய போது அவர் நியூ டவுன் பகுதியில் உள்ள கம்யூட்டர் மையத்தை அணுகியுள்ளார். அங்கு 200 ரூபாய் கொடுத்து டாக்டர் சான்றிதழை விநாயகம் பெற்று வந்துள்ளார். அதனை எடுத்துக் கொண்டு மாணவன் விக்ரம் ஆதார் மையத்திற்கு சென்ற போது புகைப்படத்தின் மீது மற்றொரு கையெழுத்து வாங்கி வருமாறு மைய பணியாளர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மாணவன் விக்ரம் சான்றிதழை எடுத்துக் கொண்டு தனது தந்தை விநாயகத்துடன் நேற்று முன்தினம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று ஏற்கனவே சான்றிதழில் கைழுத்திட்ட டாக்டரை பார்த்து போட்டோவில் கையெழுத்து, சீல் போட்டு தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது சான்றிதழை பார்த்த அரசு மருத்துவர் தன்வீர் அகமது ஏற்கனவே போட்டப்பட்டிருந்த கையெழுத்து தனது இல்லையே இதனை யார்கொடுத்தது என்று கேட்டு விசாரிக்கவே, சான்றிதழ் கொண்டு வந்த விநாயகம் தனது மகனுடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதையடுத்து தனது கையெழுத்து போலியாக போட்டிருப்பதையறிந்து அதிர்ச்சிக்குள்ளான டாக்டர் தன்வீர் அகமது இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்தார்.புகாரின் அடிப்படையில்டவுன் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவன் விக்ரம்மை பிடித்து விசாரித்ததில் கொல்லத்தெருவைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கையெழுத்து வாங்கி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நேதாஜி நகரைச் சேர்ந்த சனாயுல்லா என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.

அப்போது நியூ டவுனில் தனியார் இன்டர்நெட் சேவை மையம் நடத்தி வரும் வெங்கடேஷ் குமார் என்பவர், பல்வேறு அரசு சார்ந்த சான்றிதழை போலியாக தயாரித்து வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் போலி சான்றிதழ் வழங்கியதை வெங்கடேஷ் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அடுத்த செய்தி