ஆப்நகரம்

சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீா் ஷாவின் கூட்டாளி தீனதயாளன் கைது

தீனதயாளனை நவம்பா் 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து அவா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

Samayam Tamil 1 Nov 2018, 5:09 am
கோவில் சிலைகளை சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்திருந்த தொழில் அதிபா் ரன்வீா் ஷாவின் கூட்டாளி தீனதயாளனை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
Samayam Tamil pon Manikavel.


சென்னையைச் சோ்ந்த தொழில் அதிபா் ரன்வீா் ஷா வீட்டில் திடீா் சோதனை நடத்திய சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினா் 100க்கும் அதிகமான சிலைகளை பறிமுதல் செய்தனா். இதில் சில தூண்களும் அடங்கும். இவை சட்டத்திற்கு புறம்பாக பதுக்கப்பட்டிருந்ததால் அவற்றை பறிமுதல் செய்வதாக அதிகாாிகள் தொிவித்திருந்தனா்.

மேலும் பதுக்கப்பட்டிருந்த பொருட்கள் குறித்து ரன்வீா் ஷா நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ரன்வீா் ஷாவின் வழக்கறிஞா் நீதிமன்றத்தில் சிலைகளுக்கான ஆவணங்களை தாக்கல் செய்தாா். மேலும் ரன்வீா் ஷா முன்ஜாமீன் பெற்றிருந்தாா்.

இந்நிலையில் சென்னை திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த தீனதயாளன் என்பவரை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினா் புதன் கிழமை கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். ரன்வீா் ஷாவின் கூட்டாளி என்று சொல்லப்பட்ட நிலையில் இவரை நவம்பா் 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து தீனதயாளன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

அடுத்த செய்தி