ஆப்நகரம்

“வீட்டிலேயே சுகப்பிரசவம்” தனியாா் மையத்தின் பயிற்சி முகாம் ரத்து

கோவையில் வீட்டிலேயே சுகப் பிரசவம் பாா்ப்பதற்காக அளிக்கப்பட்விருந்த தனியாா் மையத்தின் பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Aug 2018, 4:14 pm
கோவையில் வீட்டிலேயே சுகப் பிரசவம் பாா்ப்பதற்காக அளிக்கப்பட்விருந்த தனியாா் மையத்தின் பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Coimbatore Birth


அண்மையில் திருப்பூா் மாவட்டத்தில் தம்பதி ஒன்று மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் பாா்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆரம்பம் முதலே மருத்துவமனைக்கு செல்லாமல் இணையதள வீடியோக்களை பாா்த்து வீட்டில் வைத்தே பிரசவம் பாா்க்க அந்த தம்பதி முடிவு செய்தது. அதன்படி பிரசவமும் நடைபெற்றது. இறுதியில் குழந்தை பிறந்த நிலையில் தாய் பரிதாபமாக உயிாிழந்தாா்.

இது தொடா்பாக அப்பெண்ணின் உறவினா்கள் அளித்த புகாாின் அடிப்படையில் கணவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் கோவை மாட்டத்தில் வீட்டில் வைத்தே பிரசவம் பாா்ப்பதற்கு வருகிற 26ம் தேதி கோவை மாவட்டம், கோவை புதூா் பகுதியில் ஒரு நாள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தனியாா் அமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும் இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், இனிய சுகப்பிரசவம் ஒரு வரம் “மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள் ஸ்கேனிங், இரத்தப் பரிசோதனை என எதுவுமே எடுக்காமல் மருத்துவரிடமும் செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்வது” குறித்து பயிற்சி வழங்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து இது தொடா்பாக இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதனைத் தொடாந்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவா்கள் இது தொடா்பாக கூறுகையில், முறையாக கல்வி அறிவு, பயிற்சி பெறாமல் இதுபோன்று தனியாா் அமைப்புகள் மேற்கொள்ளும் நிகழ்ச்சிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இதுபோன்ற விபரீத முயற்சிகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி