ஆப்நகரம்

கார் விபத்தில் ஒருவர் பலி, ஐவர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மைலம் பகுதியில் அதிவேகத்தில் வந்த கார் மரத்தில் மோதியதில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் பயணிந்த ஐந்து பேர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர்.

Samayam Tamil 6 Feb 2019, 10:07 pm
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மைலம் பகுதியில் அதிவேகத்தில் வந்த கார் மரத்தில் மோதியதில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் பயணிந்த ஐந்து பேர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர்.
Samayam Tamil accident


மறைந்த டிரைவர் மாரிமுத்துவின்(38) உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உடன் பயணித்து தப்பிய ஃபிரான்ஸிஸ் ரஜம் (58), சகாய மேரி (70), மோசஸ் (82), ரவிசந்திரன் (52), தாட்சாயினி ஆகியோர் திருச்சி மாவட்டம் கருமண்டபத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் தகவல் அளித்துள்ளனர்.
இவர்கள் சென்னை செல்லும் வழியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அடுத்த செய்தி