ஆப்நகரம்

மரக்கிளை ஒடிந்து விழுந்து பணியாளர் ஒருவர் பலி

மதுரையில் மழையால் சேதமடைந்த மரத்தினை அகற்றும்போது மரக்கிளை ஒடிந்து விழுந்து பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

TNN 29 Apr 2017, 6:18 pm
மதுரையில் மழையால் சேதமடைந்த மரத்தினை அகற்றும்போது மரக்கிளை ஒடிந்து விழுந்து பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Samayam Tamil one dead due to falling tree in madurai
மரக்கிளை ஒடிந்து விழுந்து பணியாளர் ஒருவர் பலி

மதுரை அருகேயுள்ள கிரம்மர்புரத்தில் கடந்த சில தினங்களுக்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அந்த கிராமத்தில் உள்ள பழமையான கட்டிடம் மீது அத்திரமரம் விழுந்துள்ளது. இந்த மரத்தினை அகற்ற திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலிருந்து 4 தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாண்டி என்பவர் மீது மரக்கிளை ஒடிந்து விழுந்தது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் மற்றொரு பணியாளர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புதுறையினர் மரத்திற்கு அடியில் உள்ள பாண்டியின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி