ஆப்நகரம்

பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து: ஒருவர் பலி!

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே, தனியார் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Samayam Tamil 30 Apr 2019, 2:12 pm
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே, தனியார் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Samayam Tamil fire


வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த தொண்டமாநத்தம் பகுதியில் தனியார் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சலை இயங்கி வருகிறது. இங்கு வாலாஜா பகுதியை சேர்ந்த சரவணன்(21) மற்றும் சதீஷ்(16) ஆகிய இருவர் வேலைபார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பட்டாசு ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதில் அங்கிருந்த பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதில், சதீஷ் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சரவணன் படுகாயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த வந்த சோளிங்கர் தீயணைப்பு படையினர் அரை மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

சம்பவ இடத்தில் அரக்கோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம் பகாவத் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த சோளிங்கர் காவல்துறையினர் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டாசு ஆலை வெடித்த விபத்தில் ஒருவர் பலியாகிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி