ஆப்நகரம்

​படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுக்கோட்டை மீனவா் உயிாிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் பகுதியை சேர்ந்த பிரபுதேவா (25) என்பவர் படகு கவிழ்ந்து உயிரிழப்பு.

Samayam Tamil 22 Jan 2019, 10:47 pm
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் பகுதியை சேர்ந்த பிரபுதேவா (25) என்பவர் படகு கவிழ்ந்து உயிரிழப்பு.
Samayam Tamil Boat


கடந்த சனிகிழமை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரம் பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அதில் அனைத்து படகுகளும் கரை திரும்பிய நிலையில் பிரபுதேவா என்பவா் சென்ற படகு மட்டும் கரை திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கடலில் மூன்று நாட்களாக தேடி வந்த நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) பிரபுதேவா சடலமாக மீட்கபட்டார். உறவினர்கள் கூறுகையில் எங்கள் மீனவ குடும்பங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இறந்து போன பிரபுதேவா குடும்பத்திற்க்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மீட்கபட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்ட்டது. இது குறித்து மணமேல்குடி கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி