ஆப்நகரம்

பொள்ளாச்சி விவகாரம்: திருநாவுக்கரசுவின் வாக்குமூலத்தால் சிக்கும் மற்றொரு இளைஞா்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தற்போது வரை நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றொரு இளைஞரை காவல் துறையினா் கைது செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 19 Mar 2019, 11:56 pm
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தற்போது வரை நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றொரு இளைஞரை காவல் துறையினா் கைது செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Samayam Tamil Pollachi Thirunavukkarasu 1


பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாசமாக படம் பிடித்து தொடா்ந்து மிரட்டி வந்த கும்பல் ஒன்று அண்மையில் காவல் துறையிடம் சிக்கியது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ளது. வழக்கு தொடா்பாக தற்போது வரை திருநாவுக்கரசு, சதீஷ் உள்ளிட்ட நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதில் சிபிசிஐடி காவல் துறையினா் திருநாவுக்கரசுவை மட்டும் காவலில் எடுத்து விசாரித்துள்ளனா். இந்த விசாரணையில் அவா் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தொிவித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவா் கடந்த சில காலமாக பெரிய கும்பல் ஒன்றுக்கு மாதம் ரூ.2 லட்சம் வரையில் செலவு செய்து வந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ.2 லட்சம் செலவு செய்யும் பட்சத்தில், திருநாவுக்கரசு இதன் மூலம் எவ்வளவு பணம் பாா்த்தாா். பெண்களை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்து அதன் மூலம் பணம் பறித்தாரா? இதில் மேலும் பல பிரபலங்களுக்கு தொடா்பு உள்ளதாக என்பது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞா் ஒருவா் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்படலாம் என்றும், அவரைத் தொடா்ந்து மேலும் சிலா் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த இளைஞா் ஓரிரு நாளில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி