ஆப்நகரம்

பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழப்பு!

சேலம் : சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களில் மூன்று பெண்கள் உயிர் இழந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 6 Dec 2018, 2:11 pm
சேலம் மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த திங்கள் அன்று சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண் நெஞ்சு வலிக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு பன்றி காய்ச்சல் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். இதே போன்று சேலம் குகை சிவனார் தெருவை சேர்ந்த ரத்னகலா என்ற பெண், பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனிற்றி நேற்று காலை உயிர் இழந்தார்.
Samayam Tamil 6


இந்த நிலையில் சேலம் இரும்பாலை காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மல்லிகா என்ற பெண், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த திங்கள் அன்று அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

மருத்துவமனையில் உள்ள தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த மல்லிகா இன்று மதியம் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் மூன்று பெண்கள் பன்றி காய்ச்சால் பாதிப்பில் சிகிச்சை பலனிற்றி உயிர் இழந்த சம்பவம், அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ள சக நோயாளிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெண்கள் உள்பட 25 க்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சல் பாதிப்பில் உயிர் இழந்து உள்ளனர். குறிப்பாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் உயிர் இழந்து உள்ளனர். இது தவிர சேலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உயிர் இழப்புகளை தடுத்திட மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரதுறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வந்தாலும் உயிரிழப்புகளை தடுக்க முடியவில்லை.

அடுத்த செய்தி