ஆப்நகரம்

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை: தலைமறைவாக இருந்தவர் கைது

பொள்ளாச்சியில் பள்ளி மாணவி காதலனால் ஏமாற்றப்பட்டு சகநண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 9 Jul 2019, 8:21 am
பொள்ளாச்சியில் 16 வயது பள்ளி மாணவி காரில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
Samayam Tamil Sexual harassment


கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த குமரன் நகரை் சேர்ந்தவர் அமானுல்லா. அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அமானுல்லாவின் நண்பர்களுக்கு தெரிந்ததால், தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து அப்பெண் பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். மாணவிக்கு நடந்த கொடுமைகளை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் தன்னை காதலிப்பதாக கூறி நண்பர்களுடன் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அமானுல்லாவை அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் குற்றத்தில் தொடர்புடைய அமானுல்லாவின் நண்பர்களான முகமது அலி, முகமது ரபிக், சையது முகமது, இர்ஷாத் முகமது, இர்ஷாத் பாட்சா உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தலைமறைவாக இருந்த பிரபு என்பவரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த பிரபுவையும் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை குறிவைத்து கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு வந்தது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், தற்போது அதே போன்ற சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி