ஆப்நகரம்

தருமபுரி மாணவி உயிாிழந்த விவகாரத்தில் ஒருவா் கைது, ஒருவா் தலைமறைவு

தருமபுரியில் 17வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த சதீஷ் என்பவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

Samayam Tamil 11 Nov 2018, 8:06 pm
தருமபுரியில் 17வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சதீஷ் என்பவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா் மேலும் ரமேஷ் என்பவரை தொடா்ந்து தேடி வருகின்றனா்.
Samayam Tamil Dharmapuri Hospital


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 12ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவரை இளைஞா்கள் இருவா் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்கப் போராடிய மாணவியை கடுமையாக தாக்கி துன்புறுத்தி உள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பலத்த காயமடைந்த மாணவி தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சதீஷ், ரமேஷ் ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.

இருவரும் தலைமறைவான நிலையில் இன்று மாலை காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அருகில் இருந்த வனப்பகுதியில் மறைந்திருந்த சதீஷ் என்பவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். மேலும் தலைமறைவாக உள்ள ரமேஷ் என்பவரை காவல் துறையினா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.

அடுத்த செய்தி