ஆப்நகரம்

எஸ்கேப் ஆனாரா ரஜினி? மீண்டும் ‘செக்’ வைத்த ஆணையம்!

ரஜினிகாந்துக்கு பதில் அவரது வழக்கறிஞர் விசாரணை ஆணையத்தில் ஆஜரான நிலையில் இது தொடர்பாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Samayam Tamil 25 Feb 2020, 3:02 pm
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணையை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது.
Samayam Tamil எஸ்கேப் ஆனாரா ரஜினி


பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வந்த ரஜினிகாந்த் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டதாகக் கூறினார். இதனால் அவரையும் விசாரணை ஆணையத்தில் ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் ஆஜராகவேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் ரஜினிகாந்த் தரப்பில் தான் அங்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் அன்றைய நாள் படப்பிடிப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டது.

தூத்துக்குடியில் நடிகர் ரஜினி இன்று ஆஜராகவில்லை; அவருக்குப் பதிலாக இவர்...!

விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் தனது வழக்கறிஞர் இளம்பாரதி மூலம் விசாரணை ஆணையத்துக்கு அபிடவிட் அனுப்பியிருந்தார்.

அதில், இன்று(பிப்ரவரி 25) என்னால் நேரில் ஆஜராக இயலாது. அப்படி வந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஆணையம் கேட்க விரும்பும் கேள்விகளை மனுதாரருக்கு அனுப்பி வைத்தால் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல தயாராக உள்ளார். அதனை சாட்சியமாக ஆணையத்தின் ஆவணங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

அதன்படி விசாரணை ஆணையத்தின் முன்பு நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக ரஜினியின் வழக்கறிஞர் இளம்பாரதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன்பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் இளம்பாரதி ரஜினியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக கூறினார்.

எம்பி ஆசை: அதிமுகவை அலறவிடும் மிஸ்சஸ் விஜயகாந்த, பாமக ஆட்டம் வேறு!

ஆனால் சற்று நேரத்தில் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் வடிவேல் முருகன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறிய தகவல்களை மறுத்தார்.

“தூத்துக்குடு துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணையில் ரஜினிகாந்தின் சாட்சியத்தை விசாரணை ஆணையம் மிக முக்கியமாக கருதுகிறது. ஆனாலும் அவர் தான் நேரில் ஆஜரானால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும், தனக்கு இந்த தேதியில் சினிமா தொடர்பாக கமிட்மென்ட் ஏற்கனவே இருக்கிறது என்றும் கூறி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டார். எனவே இன்றுமட்டுமே ரஜினிக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ரஜினிகாந்த் சமூக பொறுப்புள்ள மனிதர். சட்டத்தை மதிக்கக்கூடியவர். அவருக்கு மீண்டும் இது தொடர்பாக சம்மன் அனுப்பப்படும். ரஜினி மற்றொரு நாள் ஆஜராக வேண்டும்” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி