ஆப்நகரம்

ஈரோடு - திருப்பூர் சாலையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து - ஒருவர் பலி!

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

Samayam Tamil 16 Jul 2018, 6:29 pm
திருப்பூர்: இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
Samayam Tamil Accident1


ஈரோட்டில் இருந்து திருப்பூர் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஊத்துக்குளி அருகே மேம்பாலத்தில் வந்த போது, வேகம் காரணமாக நிலை தடுமாறியது. இதனால் எதிரே வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது.

உடனே அதிலிருந்த திருப்பூரைச் சேர்ந்த சஞ்சீவ்நாதன்(27) பாலத்தின் மேலிருந்து கீழே வீசப்பட்டார். அப்போது பாலத்திற்கு கீழே இருந்த மின்கம்பியில் விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.

பேருந்தின் முன்பாதி பாலத்திற்கு வெளியே தொங்கி நின்றது. விபத்து ஏற்பட்டவுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தப்பி ஓடிவிட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 40க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு எந்தவித பெரும் பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

One person dead in Tirupur to Erode route bus accident.

அடுத்த செய்தி