ஆப்நகரம்

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் ஒருவர் உயிரிழப்பு!!

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 40 வயதான ஒருவர் உயிரிழந்தார்.

Samayam Tamil 26 Mar 2020, 5:25 pm
கன்னியாகுமரி, கோடிமுனை பகுதியைச் சேர்ந்தவர் கடந்த 3ஆம் தேதி குவைத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு சளி, காய்ச்சல் இருந்தது.
Samayam Tamil கன்னியாகுமரியில் ஒருவர் பலி


இதையடுத்து, இவரது சளி, ரத்த மாதிரிகள் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. இந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். இதனால் கன்னியாகுமரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரத்த மாதிரிகள் வந்த பின்னர்தான் இவரது இறப்புக்கான காரணமும் தெரிய வரும்.

இவருக்கு ஏற்கனவே மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இயங்கும் அத்தியாவசிய சேவை முழு விவரம் இதோ..!

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த 59 வயது பெண் ஒருவர் இறந்தார். இவரும் ரத்த மாதிரிகள் வருவதற்கு முன்பு இறந்தார்.

ஒரு மாதகால சிறப்பு ஊதியம்: விஜயகாந்த் வலியுறுத்தல்

இவர் இறந்த பின்னர் பெறப்பட்ட ரத்த மாதிரியில் இவருக்கு கொரோனா இல்லை என்பதும், இருதய கோளாறு காரணமாக இறந்தார் என்பதும் தெரிய வந்தது.
கொரோனாவை ஒழிக்க முதல்ல இதை செய்யுங்க: கே.எஸ்.அழகிரி

அடுத்த செய்தி