ஆப்நகரம்

அறந்தாங்கி அருகே வடமாடு பிடிக்க வந்த வீரரை பந்தாடிய காளை!

புதுக்கோட்டை மாவட்டம் அருகே நடைபெற்ற வடமாடு பிடிக்கும் போட்டியில், மைதானத்தின் நடுவில் கயிறால் மாடுகளை கட்டி அதை வீரர்கள் அடக்கினர். அப்போது சிக்கிய வீரரை காளை ஒன்று முட்டி தூக்கி வீசியதால் பதற்றம் நிலவியது.

Samayam Tamil 20 Jan 2019, 10:40 am
புதுக்கோட்டை மாவட்டம் அருகே நடைபெற்ற வடமாடு பிடிக்கும் போட்டியில் கலந்து கொண்ட வீரரை, காளை முட்டி தூக்கி வீசியதால் பதற்றம் நிலவியது.
Samayam Tamil அறந்தாங்கி அருகே வடமாடு பிடிக்க வந்த வீரரை பந்தாடிய காளை!
அறந்தாங்கி அருகே வடமாடு பிடிக்க வந்த வீரரை பந்தாடிய காளை!


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டு போட்டிகள் களைகட்டியுள்ளன. முதன்முதலாக தச்சன்குறிச்சியிலும், அதனைத் தொடர்ந்து அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஜல்லிகட்டி போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜல்லிகட்டின் ஒரு பகுதியாக வடமாடு பிடிக்கும் போட்டிகள் நடைபெற்றன. இதில், சிவகங்கை, ராமநாதபுரம்,மதுரை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 12 மாடுகளும் களம் இறங்கின.

அப்போது மைதானத்தின் நடுவில் கயிறால் மாடுகளை கட்டி அதை வீரர்கள் அடக்கினர். அப்போது சிக்கிய வீரரை காளை ஒன்று முட்டி தூக்கி வீசியது. இது அங்கிருந்த பார்வையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதில் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்கப்படாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பல ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

அடுத்த செய்தி