ஆப்நகரம்

சென்னை பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை!

சென்னை அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பலர் கண் முன்னே பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 8 Dec 2016, 9:11 pm
சென்னை அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பலர் கண் முன்னே பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil one side love girl murdered in chennai perungalathur
சென்னை பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை!


சோனியா (20) என்ற இளம்பெண்ணே வெட்டிக்கொல்லப்பட்டவர். பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரிந்துவந்த இவரை வினோத் என்ற இளைஞர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். காதலை ஏற்க மறுத்த சோனியாவை கொலை செய்ய வினோத் திட்டமிட்டுள்ளார். இதன்படி, பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சோனியாவை இன்று பிற்பகல் திடீரென சராமரியாக வெட்டிக் கொன்றார்.

பலர் கண் முன்னே நடந்த இச்சம்பவத்தால், பொதுமக்கள் பீதி அடைந்தனர். பெருங்களத்தூர் பேருந்து நிலையமே பெரும் பரபரப்புக்குள்ளானது. அங்கிருந்து தப்பியோட முயன்ற இளைஞரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த இளைஞரின் பெயர் வினோத் என்றும், பிரகாசம் என்றும் மாறுபட்ட தகவல்கள் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

One side love; a girl murdered in Chennai Perungalathur.

அடுத்த செய்தி