ஆப்நகரம்

அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் வசதி தரும் ஓ.என்.ஜி.சி; கார்ப்பரேட் சமூகப் பணி...!

தனது கார்ப்பரேட் சமூகப் பணியின் ஒரு அங்கமாக அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் வசதி தரும் பணியை ஓ.என்.ஜி.சி மேற்கொண்டுள்ளது.

TNN 28 Jul 2017, 1:29 am
சென்னை: தனது கார்ப்பரேட் சமூகப் பணியின் ஒரு அங்கமாக அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் வசதி தரும் பணியை ஓ.என்.ஜி.சி மேற்கொண்டுள்ளது.
Samayam Tamil ongc provides ro water systems to 10 govt schools in tn
அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் வசதி தரும் ஓ.என்.ஜி.சி; கார்ப்பரேட் சமூகப் பணி...!


இதுதொடர்பாக ஓ.என்.ஜி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்ப்பரேட் சமூகப் பணியின் ஒரு அங்கமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் தரமான குடிநீர் வசதியை செய்து கொடுத்துள்ளது. இதற்கான விழாவில் வானதிராயன் பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓ.என்.ஜி.சி மேலாளர் ராஜேந்திரனால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ரூ.8.86 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. செந்துறை தாலுக்காவில் உடையார்பாளையம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை பெறும் பள்ளிகள்:

பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி, மூர்த்தியான்; பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி, குறிச்சி; பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி, உத்திரக்குடி; பஞ்சாயத் யூனியன் நடுநிலைப்பள்ளி, தென்னவநல்லூர்; பஞ்சாயத்து யூனியன் தொடக்க பள்ளி, துப்பபுரம்; பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி, எண்டல்; பஞ்சாயத் யூனியன் நடுநிலைப்பள்ளி, அணைக்குடம்; பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி, சிலை; அரசு உயர்நிலைப்பள்ளி, வானதிராயன் பட்டினம் மற்றும் அதனேரி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி.

ONGC provides RO water systems to 10 govt schools in TN.

அடுத்த செய்தி