ஆப்நகரம்

தமிழகத்தில் 4,050 கழிப்பறைகள் கட்டப்படும்: ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 3 முக்கிய மாவட்டங்களில் 4050 கழிப்பறைகள் கட்டப்படும் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

TNN 15 Jul 2017, 6:16 am
தமிழகத்தில் உள்ள 3 முக்கிய மாவட்டங்களில் 4050 கழிப்பறைகள் கட்டப்படும் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.
Samayam Tamil ongc to construct 4050 toilets in three tn districts
தமிழகத்தில் 4,050 கழிப்பறைகள் கட்டப்படும்: ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அறிவிப்பு


என்னதான், கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தாலும், நான் செய்கிற வேலையைத் தான் செய்வேன் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள அரியலூர், ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் ஆகிய 3 முக்கிய மாவட்டங்களில் உள்ள வீடுகளில் தனித்தனியாக 4050 கழிப்பறை வசதி கட்டித்தரப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 1350 கழிப்பறைகள் வீதம் கட்டப்படும்.

இந்த திட்டத்திற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ரூ.14.17 கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வச்சதா அதிரடி திட்டத்தில் கட்டப்பட இருக்கும் கழிப்பறைகள் அடுத்த 6 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும். சமீபத்தில் இந்த நிறுவனம் அசாம், குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, ஒரிசா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட ரூ.55.99 கோடி செலவில் 16 ஆயிரம் கழிப்பறைகள் கட்டுவதற்கு ஒப்புதல் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Even as residents of Kathiramangalam village in Thanjavur continued their protests against ONGC's exploration work in the area on Friday, the oil and gas exploration agency has announced that they will construct 4,050 Individual Household Latrines (IHHL) in Ariyalur, Ramanathapuram, and Tiruvarur districts.

அடுத்த செய்தி