ஆப்நகரம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்தம்!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 20 Dec 2018, 5:16 pm
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil online


ஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவிக்கும் வரையில், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யக் கூடாது என்று நீதிபதி புஷ்பா சத்திய நாராயணன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இதையடுத்து, இது தொடர்பாக நாளை விசாரணைக்கு வரும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால கோரிக்கையில், தீர்ப்பு வரும் வரை தனி நீதிபதியின் தீர்ப்பை நிறுத்தி வைத்தும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி