ஆப்நகரம்

திமுகவால் மட்டுமே மாற்றத்தை தர முடியும்: கனிமொழி

சூழ்நிலையை பொறுத்தே தேர்தல் கூட்டணி அமையும் என்று திமுக மகளிர் அணி செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்

TNN 28 Feb 2016, 7:44 pm
சென்னை: சூழ்நிலையை பொறுத்தே தேர்தல் கூட்டணி அமையும் என்று திமுக மகளிர் அணி செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil only dmk can bring the change in tn says kanimozhi
திமுகவால் மட்டுமே மாற்றத்தை தர முடியும்: கனிமொழி


இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறியாதாவது:- "தமிழகத்தில் சிறந்த ஆட்சி மாற்றத்தை திமுகவால் மட்டுமே தர முடியும். திமுக-வின் தேர்தல் அறிக்கை தயாராகி விட்டது. விரைவில், கருணாநிதி வெளியிடுவார்.

அரசியலில் சமூக வலைதளங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். திமுக-வால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். தேமுதிக தலைவரை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சந்தித்தது பற்றி கருத்துக கூற விரும்பவில்லை.

யார் யாரோடு கூட்டணி அமைத்தாலும் திமுக உறுதியாக வெற்றி பெறும். நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்" என்று கனிமொழி கூறினார்.

மேலும், இன்று சென்னை பெரியார் திடலில் நடந்த ஆட்சி மாற்றத்துக்கான சமூக வலைதள நண்பர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திமுக மகளிர் அணி செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.

அடுத்த செய்தி