ஆப்நகரம்

போக்குவரத்து அபராத ரசீதில் ஹிந்தி திணிப்பு; மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

போக்குவரத்து போலீசாரால் வழங்கப்படும் அபராத கட்டணத்துக்கான ரசீது விவரங்களில் ஹிந்தி மொழி இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 3 Nov 2019, 2:25 pm
சென்னை: போக்குவரத்து அபராத கட்டணத்துக்காக வழங்கப்படும் ரசீது விவரங்களில் திணிக்கப்பட்டுள்ள ஹிந்தியை உடனே மாற்றாவிடில் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil mk stalin


நாடு முழுவதும் ஹிந்தி பேசும் மக்களால் கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதியன்று டெல்லியில் ஹிந்தி நாள் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷா, ”நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்” என்றார்.

எச் ராஜா, ஸ்டாலின் கைகுலுக்கல், எதுக்குனு தெரியுமா..?

மத்திய பாஜக அரசின் ஒரு நாடு, ஒரு மொழி கொள்கைக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஹிந்தி பேசாத பிற மாநிலங்களிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்வினையாற்றினர்.

இதையடுத்து, இரண்டாவது மொழியைக் கற்க வேண்டும் என்றால் ஹிந்தி கற்றால் நன்றாக இருக்கும் என்று தான் கூறினேன். இந்தியாவின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று கூறவில்லை. நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என அமித்ஷா விளக்கம் அளித்தார்.

வெள்ளத்தில் களமிறங்கிய எம்பி கனிமொழி!

இந்நிலையில், போக்குவரத்து போலீசாரால் வழங்கப்படும் அபராத கட்டணத்துக்கான ரசீது விவரங்களில் ஹிந்தி மொழி இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் தானியங்கி கேமிராக்கள் மூலம் வாகனத்தின் எண்களை வைத்து போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கான அபராத ரசீதுகள், விதிகளை மீறுவோரின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும். அந்த ரசீதுகளில் ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழியும் இடம்பெற்றுள்ளது. இந்த ரசீதுகள் தேசிய தகவல் ஆணையத்தின் மூலம் அச்சடிக்கப்படு வழங்கப்படுவதால் தங்களால் எதுவும் செய்ய இயலாது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலத்தில் மட்டுமே அபராத கட்டண ரசீதுகள் இருந்த நிலையில், தற்போது தமிழ் மொழி இடம்பெறாமல் ஹிந்தி மொழி இடம்பெற்றுள்ளது. இது மத்திய அரசின் தீவிர ஹிந்தி திணிப்பையே காட்டுவதாக தமிழ் மொழி ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: இருவர் மீது குண்டர் சட்டம் ரத்து!!

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டியில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், போக்குவரத்து அபராத கட்டணத்துக்காக வழங்கப்படும் ரசீது விவரங்களில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ளது; தமிழில் இல்லை. இதை மாற்ற அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி