ஆப்நகரம்

ஊட்டியில் 15வது ரோஜா கண்காட்சி கோலாகலமாக துவக்கம்

ஊட்டியில் இன்று 15வது ஆண்டு ரோஜா கண்காட்சி தொடங்கியது.

TNN 13 May 2017, 3:55 pm
ஊட்டியில் இன்று 15வது ஆண்டு ரோஜா கண்காட்சி தொடங்கியது
Samayam Tamil ooty summer festival
ஊட்டியில் 15வது ரோஜா கண்காட்சி கோலாகலமாக துவக்கம்


நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு ஊட்டி ரோஜா பூங்காவில் 15-வது ரோஜா கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. இன்று மற்றும் நாளை நடைபெறும் இந்த கண்காட்சியில், பல்வேறு கலைஞர்களின் மலர் அலங்காரங்கள் பங்கேற்க உள்ளன. கிட்டத்தட்ட 5 வகையான ரோஜா இனங்களிலிருந்து 4000 ரகங்களை கொண்ட 30 ஆயிரம் ரோஜா செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன.

ஊட்டியில் இன்று தொடங்கிய 15வது ரோஜா கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பாக அலங்கரிக்கப்படும் ரோஜா செடிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி