ஆப்நகரம்

கேரளாவிலிருந்து கோவையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் - மக்களுக்கு நோய் பரவும் அபாயம்

கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் தமிழக எல்லையில் கொட்டப்படுவதால், அங்கு கதிர்வீச்சு ஏற்பட்டு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

TNN 25 Oct 2016, 11:34 am
கோவை : கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் தமிழக எல்லையில் கொட்டப்படுவதால், அங்கு கதிர்வீச்சு ஏற்பட்டு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
Samayam Tamil open disposal of medical waste still happens in coimbatore
கேரளாவிலிருந்து கோவையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் - மக்களுக்கு நோய் பரவும் அபாயம்


கேரளா - தமிழக எல்லையான கோவை மாவட்டத்தின் எட்டிமடையை சேர்ந்த விவசாயி செல்லப்ப கவுண்டரின் நிலத்தை, பாலக்காட்டை சேர்ந்த முகமது இஸ்மாயில், பிளாஸ்டிக் தரம்பிரிக்குப்பதற்காக வாடகைக்கு எடுத்துள்ளார். இங்கு ஒரு மாத காலமாக மூட்டை மூட்டையாக லாரிகளில் பொருட்களை கொண்டு வந்துள்ளனர்.

நேற்று அதிகாலை ஒரே சமயத்தில் 24 லாரிகளில் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. கிராம மக்கள் இவ்வளவு லாரிகளில் என்ன கொண்டு வந்துள்ளனர் என பார்க்க கூடினர். அப்போது அந்த லாரிகளில் இருந்து மருத்துவ கழிவுகள் அங்கு கொட்டப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வருவாய் துறை, காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து லாரிகளை பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், “இந்த மருத்துவ கழிவுகள் கேரளாவின் கோழிக்கோட்டிலிருந்து எடுத்து வரப்பட்டது. இந்த அளவு தூரத்திற்கு லாரி வாடகை ரூ 4 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த மருத்துவ கழிவுகளை கொண்டு செல்வதற்கு ரூ. 8 ஆயிரம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதிக பணம் கிடைப்பதால் தமிழக லாரிகள் கூட பயன்படுத்தப்படுகிறது.

அதோடு, தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் லாரி ஒன்றிற்கு ரூ.200 கொடுத்தால் எந்த பொருளாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல் அனுமதிக்கிறார்கள். ஆனால் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு எடுத்து சென்றால் அவ்வாறு கேரளா செக்போஸ்டில் அனுமதிக்கப்படுவதில்லை என லாரி டிரைவர் ஒருவர் கூறியுள்ளார். இந்த கழிவுகளை இறக்கு வதற்கு 20 பீகார் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி