ஆப்நகரம்

தாம்பரத்தில் நீட் தேர்வுக்கு எதிரான கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேசம்.!

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட்த்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான தனது கருத்துகளை எடுத்துரைத்தார்.

TNN 13 Sep 2017, 11:54 am
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட்த்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான தனது கருத்துகளை எடுத்துரைத்தார்.
Samayam Tamil opposes dmk party leader stalin conducts the protest against neet exam on tambaram
தாம்பரத்தில் நீட் தேர்வுக்கு எதிரான கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேசம்.!


தமிழகத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி மனவிருக்தியால் தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவின் இழப்பு தமிழக மாணவர்களிடையேயும், அரசியல் கட்சித் தலைவர்களிடையேயும், பயங்கர கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவி அனிதாவின் மரணத்துக்குக் நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யும் படியும் தமிழகத்தில் பயங்கர போராட்டங்கள் வெடித்துள்ளன.



இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி, நீட் தேர்வுக்கு எதிராக திமுக அணி சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று தாம்பரத்தில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டாலின் கூறியதாவது,
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கொண்டு வந்த நீட் தேர்வை முதன் முதலாக எதிர்த்தவர் கருணாநிதி தான் என்று கூறிய ஸ்டாலின், இதற்கு எதிராக தலைவர் கருணாநிதி தொடுத்த வழக்கில உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு ரத்து செய்தது என்று கூறினார். மேலும் ,மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் தான் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என தெரிவத்த ஸ்டாலின் இந்த அரசுகள் மாணவர்களுக்கு துரோகம் இழைத்துக் கொணடிருக்கிறது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், கவிஞர் பழனி பாரதி எழுதிய புதிய இந்தியா என்னும் கவிதையை வாசித்த ஸ்டாலின் இந்த அரசு மக்களுக்கு தொடர்ந்து அநீதிகளை இழைத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

Opposes dmk party leader stalin, conducts the protest against neet exam on tambaram.

அடுத்த செய்தி