ஆப்நகரம்

வேலூரில் இப்படியொரு குண்டைப் போட்ட உதயநிதி ஸ்டாலின்!

வேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, உதயநிதி அதிரடியான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 29 Jul 2019, 5:21 pm
வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி, வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த முறை மக்களவை மற்றும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டணிக்கு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
Samayam Tamil Udhayanidhi Stalin


இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக திமுக இளைஞரணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அதன் பிறகு, தனது அரசியல் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் தற்போது வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரக் களத்தில் உதயநிதி இறங்கியுள்ளார். வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடையாஞ்சி, அழிஞ்சிகுளம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று உதயநிதி பிரச்சாரம் செய்தார்.

செல்பி, நடை பயணம், திண்ணை பிரசாரம்: வாக்காளர்களை கவரும் ஸ்டாலின்

அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது பேசிய அவர், திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வாக்களிக்க செல்பவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலிடத்தில் கதிர் ஆனந்த் பெயர், உதயசூரியன் சின்னம் இடம்பெற்றுள்ளது. அதற்கு தவறாமல் வாக்கு செலுத்தி விடுங்கள். அடுத்த ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வந்துவிடும்.

சூடுபிடிக்கும் வேலூர் தேர்தல்: ஸ்டாலின், எடப்பாடி ஒரே நேரத்தில் பிரச்சாரம்!

அதில் அபார வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார். இந்தியா முழுவதும் பிரதமர் மோடி விக்கெட் வீழ்த்தி விட்டார். ஆனால் தமிழகத்தில் ஒரேவொரு விக்கெட் எஞ்சியிருக்கிறது. அதை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் கூட வாங்கக் கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

ஸ்டாலின் ராசியால் தான் கர்நாடக அரசு கவிழ்ந்தது- பிரச்சாரத்தில் போட்டு தாக்கிய பழனிசாமி!

அடுத்த செய்தி