ஆப்நகரம்

பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்; எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை

பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

TNN 30 May 2017, 10:48 am
சென்னை: பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Samayam Tamil opposition parties give combined statement to stop beef ban
பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்; எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை


இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளாவில் மாட்டுக்கறி திருவிழா நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 7 கட்சி தலைவர்கள் ஒன்றாக இணைந்து, அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் உணவுக்கான உரிமையை மத்திய அரசின் முடிவு தகர்த்து எறிவதாக குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய அரசின் முடிவு ஒற்றை கலாச்சாரத்தை திணிக்கும் பண்பாட்டு சர்வாதிகாரம் என்று குறிப்பிட்டுள்ளனர். எதை உண்ண வேண்டும் என்பதை நிர்ணயிக்க அரசுக்கு யார் அதிகாரம் அளித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னதாக பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மாட்டுக்கறி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Opposition parties give combined statement to stop Beef ban.

அடுத்த செய்தி