ஆப்நகரம்

பரபரப்பான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; அதிமுக சார்பில் தொடங்கியது தேர்தல் பிரச்சாரம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

tnn 7 Dec 2017, 12:07 pm
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ops and eps starts rknagar byelection campaign
பரபரப்பான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; அதிமுக சார்பில் தொடங்கியது தேர்தல் பிரச்சாரம்!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இதற்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் ஆளுங்கட்சி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

முதல்கட்டமாக ஆளுங்கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

அதில் முதலமைச்சர் ஈபிஎஸ், துணை முதலமைச்சர் ஓபிஎஸ், வேட்பாளர் மதுசூதனன், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

ஏராளமான வாகனங்களுடன் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

OPS and EPS starts RKNagar byelection campaign.

அடுத்த செய்தி