ஆப்நகரம்

ஜெ.சமாதியில் ஓபிஎஸ் - இபிஎஸ்! பிரிந்த இடத்தில் கூடும் அதிமுக!

ஓபிஎஸ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் சந்தித்து அதிமுக அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 18 Aug 2017, 6:51 pm
ஓபிஎஸ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் சந்தித்து அதிமுக அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ops and eps to meet in jayalalithaa memorial
ஜெ.சமாதியில் ஓபிஎஸ் - இபிஎஸ்! பிரிந்த இடத்தில் கூடும் அதிமுக!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். மேலும், மேலும், மறைந்த முதல்வர் வசித்த வேதா இல்லம் அவரது நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டு, பொது மக்கள் பார்ப்பதற்கு திறக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதிமுக அணிகள் இணைப்பு விரைவில் நடைபெறலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு இணைப்புக்கான அச்சாரமாக அமையலாம் என்ற கணிப்பு உருவாகியுள்ளது.



இந்நிலையில் இன்று மாலை 7.30 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கூட்டாக அதிமுக அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று செய்தி கசிந்துள்ளது.
இதற்காகவே, வழக்கத்திற்கு மாறாக ஜெயலலிதாவின் சமாதி கூடுதலாக பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதனால், இன்றே கூடிய விரைவில் அதிமுகவின் அணிகள் இணைவது பற்றி முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி