ஆப்நகரம்

நான் 100% முதல்வராவேன் - சசிகலா; மக்களால் விரும்பப்படுகிறவர் முதல்வராகலாம் - ஓபிஎஸ்

அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலா முதல்வராக பதவியேற்க காத்துக்கொண்டிருந்த தருணத்தில், முதல்வர் ஓ பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எதிரான கருத்து தெரிவித்த பின் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

TNN 9 Feb 2017, 4:27 am
அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலா முதல்வராக பதவியேற்க காத்துக்கொண்டிருந்த தருணத்தில், முதல்வர் ஓ பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எதிரான கருத்து தெரிவித்த பின் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
Samayam Tamil ops and sasikala press meet about chief minister post
நான் 100% முதல்வராவேன் - சசிகலா; மக்களால் விரும்பப்படுகிறவர் முதல்வராகலாம் - ஓபிஎஸ்


இந்நிலையில் அவர்கள் இருவரும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நான் முதல்வராவேன் என சசிகலாவும், மக்கள் விரும்பினால், அவர்கள் விருப்பபடுபவர்கள் தான் முதல்வராக முடியும் என ஓ பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளனர்.



சசிகலா கருத்து:
இத்தனை ஆண்டுகாலம் அம்மாவைப் பார்த்துக்கொண்டேன். அவரது மறைவின் போது நான் அனுபவித்த வேதனை எனக்கு மட்டும் தான் தெரியும்.

மேலும் 100% நான் தான் தமிழக முதல்வராக பதவியேற்பேன். என்னிடம் நன்றாக பேசிக்கொண்டே ஓபிஎஸ் துரோகம் செய்துள்ளார் என பேட்டியளித்துள்ளார்.

ஓபிஎஸ் கருத்து:
அம்மாவால் இதற்கு முன்பே அடையாளம் காணப்பட்டவன் நான். தமிழக முதல்வராக மக்கள் யாரை விரும்புகின்றனரோ அவர் தான் வரமுடியும்.

அதிமுக தலைமை மீண்டும் என்னை முதலமைச்சராக செயல்பட அழைத்தால், கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் பேசி அவர்களிடம் ஒப்புதல் பெற்றே, அவர்களின் ஒத்துழைப்புடன் பதவியை மீண்டும் ஏற்பதைப் பற்றி யோசிப்பேன். என கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி