ஆப்நகரம்

ஆர்கேநகர் இடைத்தேர்தல் ரத்து: ஓபிஎஸ், சசி அணியே காரணம்-ஸ்டாலின் தாக்கு

ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்துக்கு பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அணியினர் தான் முக்கிய காரணம் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 12 Apr 2017, 10:47 pm
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்துக்கு பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அணியினர் தான் முக்கிய காரணம் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil ops and sasikala team is the main reason for rk nagar bypoll cancellation mk stalin
ஆர்கேநகர் இடைத்தேர்தல் ரத்து: ஓபிஎஸ், சசி அணியே காரணம்-ஸ்டாலின் தாக்கு


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பணப்பட்டுவாடா புகார்களையடுத்து, இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இந்நிலையில், ஆர்கே இடைத்தேர்தல் ரத்து குறித்து திமுக சார்பில், புதுவண்ணாரப்பேட்டை அருகே மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கலந்து கொண்டார்.

பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசியதாவது: ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்துக்கு பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அணியினர் தான் முக்கிய காரணம். தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஊழலுக்கு காரணமும், பாஜக தயவில் ஒளிந்து கொண்டுள்ள மணல் மாஃபியா ஓபிஎஸ் தான்.

வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய தமிழக முதலமைச்சர் மீதும், அமைச்சர்கள் மீதும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும். பணப் பட்டுவாடாவால் ஜனநாயகம் சீர் குலைந்துள்ளது, ஊழல்கள் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். வருமான வரி சோதனை பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களை கைது செய்ய வேண்டும்.

ஆர்கே நகரில் திமுகவின் வெற்றி தாமதமாகி இருக்கிறது. தேர்தலை முறையாக நடத்த, தேர்தல் ஆணையம் புதிய சட்டம் இயற்ற வேண்டும். தேர்தல் ஆணையம் தனது முழுபலத்தை பயன்படுத்த வேண்டும் என்றார்.
OPS and Sasikala team is the main reason for RK Nagar ByPoll cancellation: MK Stalin

அடுத்த செய்தி