ஆப்நகரம்

தன்னம்பிக்கை விடாதீர்; பிளஸ் டூ தோல்வியாளர்களை ஊக்கப்படுத்திய ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின்!

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் குறித்து தங்கள் கருத்துகளை ஓபிஎஸ், ஸ்டாலின் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Samayam Tamil 16 May 2018, 6:17 pm
சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் குறித்து தங்கள் கருத்துகளை ஓபிஎஸ், ஸ்டாலின் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
Samayam Tamil Plus 2 Results
பிளஸ் டூ தோல்வியாளர்களை ஊக்கப்படுத்திய ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின்!


தமிழ்நாட்டில் இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.1% மற்றும் மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்வில் முன்னேற்றம் காண தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.

நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி கூறுவார். தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வியை தொடர வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள் தன்னம்பிக்கையை விட்டுவிடாதீர்.

மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வியை தொடர வேண்டும்.

பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வெற்றிக்கு முந்தைய நிலை இது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்த வாய்ப்பை தவற விடாமல், கடினமாக உழைத்து தேர்ச்சி பெற எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.

OPS and Stalin greet winners, try to instil confidence in those who failed.

அடுத்த செய்தி