ஆப்நகரம்

ஜெயலலிதா மரணம்: பன்னீர்செல்வம் இன்று உண்ணாவிரதப் போராட்டம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.

TNN 8 Mar 2017, 9:16 am
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
Samayam Tamil ops camp conducts hunger strike today in 36 places
ஜெயலலிதா மரணம்: பன்னீர்செல்வம் இன்று உண்ணாவிரதப் போராட்டம்


அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கட்டாயத்தின் பேரில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக அதிரடி தெரிவித்தார். அது முதலே பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக பிளவு கண்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் பன்னீர்செல்வம் அணியினர், அது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி தமிழகம் மற்றும் புதுவை உள்பட சுமார் 36 இடங்களில் ஓ.பன்னீ்ர்செல்வம் அணியினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மதுசூதனன் தலைமையில் நடக் கும் உண்ணாவிரத போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், பி.எச்.பாண்டியன், பொன்னையன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பன்னீர்செல்வம் அணியினர் நடத்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கும் என தெரிகிறது.
OPS camp conducts hunger strike today in 36 places

அடுத்த செய்தி