ஆப்நகரம்

ஓபிஎஸ் கார் டிரைவர் மகள் தற்கொலை; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் டிரைவரின் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. 12 வகுப்பு படிக்கும் இளம் பெண்ணான இவரது இந்த திடீர் தற்கொலைக்கு பாலியல் தொல்லை காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 20 Jul 2019, 12:40 pm
சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் டிரைவரின் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர். இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
Samayam Tamil panner selvam ops


இவரது மகள் நிவேதிதா 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நிவேதிதா திடீரென தற்கொலை செய்து கொண்டார். நிவேதிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நிவேதிதா தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். ஓபிஎஸ் உதவியாளராக இருந்த மதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இந்நிலையில் கார் ஓட்டுநரின் மகள் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தத் தற்கொலையில் அரசியல் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி